Saturday, 25 October 2008

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!!!!

அது ஏங்க விமானத்துல போயிட்டு வந்தவங்க மூணு நாளானுலும் அந்த டாக் அ கழட்டவே மாட்டேங்குறாங்க....? நானும் பலதடவை பார்த்திருக்கேன். நான் விமானத்துல போனதில்லைன்றதால தெரியலை.உண்மையிலேயே அது மூணுநாளைக்கு பேக்லயோ இல்ல் சூட்கேஸிலயோ இருக்கணுமா..? அப்படி தேவை இல்லைன்னா, உடனே எடுத்துடலாமே..?இல்ல பகுமானத்துக்கு மாட்டிருக்காங்கன்னா,முதல் தடவை போயிட்டு வர்ரவங்க வச்சிருக்கலாம்.ஆனா பல தடவை 'பொசுக்கு,பொசுக்கு'ன்னு போயிட்டு வர்ரவங்க கூட வச்சிருக்காங்களே...அது ஏன்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈஈஈஈஇ.....

முதல் பதிவு

"பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பென்று கொள்வேன்"
-மகாகவி பாரதியார்

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.வருக...ஆதரவு தருக....